மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசியில் பலத்த மழை பெய்து வருவதால், நாளை அங்கு அவர் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியில், வாரணாசி தொகுதி மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், புதிய மின் திட்டங்களை மோடி துவக்கிவைப்பதாக இருந்தது. அது போல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் ஒன்றையும் மோடி திறந்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ள மைதானம் முழுவதும் மழை நீர் புகுந்துள்ளது.
இன்றும் தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருவதால், மோடியின் நாளைய வாரணாசி சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments