கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இனி இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களையும், தொப்புளை காட்சிப்பொருளாக்கும் குட்டை மேல்சட்டைகளையும் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கல்விக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இக்கல்லூரியின் முதலாண்டு மாணவியருக்கான வகுப்புகள் வரும் ஜூலை 8-ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன.
அன்றிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு சீருடையாக சுரிதார்- சல்வார் மற்றும் துப்பட்டாவுக்கு பதிலாக ‘ஓவர்கோட்’ கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவியர் மட்டும் விரும்பினால் தலையை மறைக்கும் துப்பட்டா அணிந்துகொள்ள தடை இல்லை எனவும் இந்த கல்லூரியின் முதல்வரான பேராசிரியை சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
0 comments