onecol

ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள்

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது.
இவற்றில் “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டி இன்று பிற்பகல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பெருமளவான வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் முதல் இடத்தினை மட்டக்களப்பினை சேர்ந்த எஸ்.சியாம்குமார் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த எம்.சி.எம்.அஸ்மீர் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பினை சேர்ந்த எஸ்.புவனசிங்கம் பெற்றுக்கொண்டார்.
இறுதி பரிசு வழங்கல் நிகழ்வு கிழக்கு மாகாண விளையாட்டுப்பணிப்பாளர் கே.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
IMG_0010

IMG_0011

IMG_0014

IMG_0015

IMG_0016

IMG_0026

IMG_0028

IMG_0032

IMG_0034

IMG_0042

IMG_0048

IMG_0051
IMG_0053
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply