இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மெர்டன் பகுதியில் ராணுவ தின அணிவகுப்பு நேற்று நடந்தது. அதில் தற்கொலை தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அந்த தகவல் இங்கிலாந்து உளவுத் துறைக்கு கிடைத்தது.
அதை தொடர்ந்து போலீசார் அதி தீவிரமாக செயல்பட்டு ஜுனைரு உசேன் என்ற தற்கொலை படை தீவிரவாதியை கைது செய்தனர். அவர் பிர்மிங்காமை சேர்ந்தவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இங்குள்ள ராணுவ வீரர்கள் பணிபுரிந்த போது அங்கு தீவிரவாதிகளையும், பொதுமக்களையும் கொன்று குவித்தனர். தற்போது இங்கு திரும்பி வந்துள்ளனர்.
அவர்களை பழி வாங்க திட்டமிட்டோம் ராணுவ அணிவகுப்பின் போது எனது உடலில் குண்டுகளை கட்டி கூட்டத்துக்குள் குதித்து வெடிக்க செய்து அதன் மூலம் அவர்களை கொல்ல திட்டமிட்டேன்.
அதற்கான உத்தரவை சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர்கள் எனக்கு பிறப்பித்து இருந்தனர் என தெரிவித்தான்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ராணுவ அணி வகுப்பில் நடைபெற இருந்த தற்கொலை தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
0 comments