புதுஇயக்குநர் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி ஆகியோர் நடிக்கும் புதியபடத்துக்கு உடனே தேதி கொடுத்து அந்தப்படக்குழுவுக்குச் சந்தோசத்தைக் கொடுத்த பிரகாஷ்ராஜ், படப்பிடிப்பின்போது சந்தோசத்தைத் திரும்பஎடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படக்குழுவினர், படத்துக்காகப் போட்டுவைத்திருந்த பட்ஜெட்டைக் காட்டிலும் இவர் தரப்பில் அதிகச்செலவு வைத்துவிட்டார்களாம். உதவியாளர்களுக்கு அதிகபட்சமான பேட்டா மட்டுமின்றி அவர்களுக்கு விமானத்தில் பயணச்சீட்டுப் போட்டுக்கொடுக்கச் சொல்லிக்கேட்டார்களாம்.
ஒருநாள் படப்பிடிப்புக்கு இவ்வளவு பட்ஜெட் என்று அவர்கள் போட்டுவைத்திருந்த கணக்கைவிடப் பலமடங்கு செலவு அதிகமாகிவிட்டதென்கிறார்கள். செலவைக்கூட சமாளித்துவிடலாம், ஆனால் திரைக்கதை மற்றும் வசனங்களிலும் அவருடைய தலையீடு அதிகமாக இருந்ததென்றும் சொல்லப்படுகிறது. இது எதற்கு இப்படிவருகிறது? இதை அப்படி மாற்றுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாராம்.
இதனால் நினைத்த மாதிரி படமெடுக்கமுடியவில்லை என்று இயக்குநர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. குறைவான சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மட்டுமின்றி உடனே தேதிகளும் கொடுத்தார் என்பதால் அவர் சொல்லியவற்றைக் கேட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று என்றும் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அவருக்குள்ளும் ஒரு இயக்குநர் இருப்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் படத்துக்கு நன்மையான விசயங்களாக அமைந்துவிட்டால் நல்லதுதானே என்று சொல்லி இயக்குநரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்களாம்.
0 comments